Tuesday, April 29, 2025
HomeUncategorizedவெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மல்லவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்;த சம்பவம் 30.07.2024 இன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை 27 வயது ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
29.07.2024 நேற்று பிற்பகல் 20 இலட்சம் பணத்தினை  கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடிய நபர் அதன் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை

குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில்  அவனது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கில் இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து தேடியும் நபரை காணவில்லை வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) பகுதியில் உடலம் கிடப்பது இனம்காணப்பட்டு பிரதேச வாசிகளால் உடலம் மீட்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன் குளம் பொலீசார் நீதிபதி முன்னிலையில் உடலத்தினை மீட்கும் நடவடிக்கையிலம் சம்பவம் தொடர்பிலான விசாரணையினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்
குறித்த இளைஞன் கனடாவிற்கு செல்வதற்காக தயாரான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments