Tuesday, April 29, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தவர் கைது!

புதுக்குடியிருப்பில் சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 31 அகவையுடை ஆண் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

16 வயது 3 மாதங்கள் நிறைந்த சித்த சுயாதீன சிறுமி ஒருவரை காதல் என்ற பெயரில் காதலித்து பாலியல் துஸ்பிரயேம் மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அங்கு சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியினை சேர்ந்த 31 அகவையடைய ஆணினை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments