Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவு சந்தை கடைத்தொகுதியில் தீ விபத்து!

முல்லைத்தீவு சந்தை கடைத்தொகுதியில் தீ விபத்து!

முல்லைத்தீவு நகர்பகுதியில் கடைத்தொகுதிகள் தீப்பிடித்து எரிந்துள்ளன!

முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்து சேதடைந்துள்ளன.

இரண்டு கடைகள் மற்றும் களங்சியம் ஒன்றும் இந்த தீவிபத்தின் போது சேதமடைந்துள்ளன.இரண்டு கடைகளும் முற்றாக எரிந்துள்ளதுடன் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.

30.07.2024 இன்று அதிகாலை வேளை இந்த தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லைஅதிகாலை வேளை இடம்பெற்ற தீவிபத்தினை காவலளிகள் மற்றும் அதில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் விழிப்படைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதேச சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன இவ்வாறு தீவிபத்தினை கட்டுப்படுத்தும் தீ யணைப்பு பிரிவு இல்லாத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments