முல்லைத்தீவில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு!


முல்லைத்தீவில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நாட்டுப்பற்றாளர் தியாகச் சுடர் அன்னை பூபதியின் 35ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின்  உடையார்கட்டு பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் மேஜர் கதிரவன் அவர்களின் தந்தையார் ஏகாம்பரம் ஜயா ஏற்றினர்.

 ஈகைச்சுடரினை சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்வணக்கம்  இடம்பெற்றது

நிகழ்வில் உடையார்கட்டு பிரதேச வர்த்தக சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் வர்த்தகர்கள், உடையார் கட்டு பிரதேச முச்சக்கர வண்டி சங்க தலைவர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்,பிரதேச பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்வை உணர்வுபூர்வமாக சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *