Monday, April 28, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் மாரடைப்பினால் உயிரிழந்த கடற்படை புலனாய்வாளர்!

முல்லைத்தீவில் மாரடைப்பினால் உயிரிழந்த கடற்படை புலனாய்வாளர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த  கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி  வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் 15.04.2023 இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று 16.04.2023 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17) பிரேத பரிசோதனைக்காக உட்ப்படுத்தப்பட்ட்டபோது குறித்த வீரர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments