பொலிஸ் ரீசேட் அணிந்து சென்று வீடொன்றில் இருந்தவர்களை கட்டி விட்டு களவு!

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதி ஒன்றில் இன்று அதிகாலை களவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இன்று அதிகாலை குறித்த வீட்டிற்குள் நுழைந்த 5 பேர் கொண்ட குழு வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு தாக்கி விட்டு வீட்டில் இருந்த பணம் , நகைகளை எடுத்து தருமாறு மிரட்டி உள்ளனர் ,

வீட்டின் ஜன்னலினை உடைத்து உள் சென்ற திருடரில் ஒருவர் ,உள்நுழைந்து வாசல் கதவினை திறந்த பிற்பாடே மற்றயவர்கள் உள்நுழைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

குடும்பஸ்தரின் 14 வயது மகனை கொலை செய்யபோவதாக மிரட்டி, தாய் தந்தையரின் கண்களை மூடி கட்டி விட்டு மகனை கொண்டே நகைகளை எடுத்து தருமாறு மிரட்டியுள்ளனர்

வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியே களவு சம்பவம் இடம்பெற்றுள்ளது

திருட்டு கும்பலில் ஒருவர் பொலிஸ் என அடையாளப்படுத்தப்பட்ட ரீசேட் அணிந்து வந்திருந்ததாகவும் , உங்கள் கணவரை விசாரிக்க விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தே உள் நுழைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்

இதேவேளை கொள்ளையர்களினால் வீட்டில் இருந்தவர்களின் மோட்டார் சைக்கிள் இரண்டும் களவாடப்பட்டிருந்ததுடன், களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று எரிபொருள் தீர்ந்த நிலையில் திருடர்களினால் கைவிடப்பட்ட நிலையில் , பொலிசாரினால் மீட்கப்பட்டிருந்தது

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Admin Avatar