உடையார் கட்டில் நிமோனியா காச்சலால் பீட்டிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு அகவை சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று 13.04.23 உயிரிழந்துள்ளார்.

நேற்று 12.04.23 இரவு சிறுவனுக்கு சளிகாச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது அங்கு இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் பிரோத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்தியா அதிகாரி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன்போது சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *