புதுக்குடியிருப்பில் கூரை பிரித்து கொள்ளை!

புதுக்குடியிருப்பில் வீடு உடைத்து கொள்ளை!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வீடு உடைத்து கொள்ளைசம்பவம் ஒன்று 19-06-24 இடம் பெற்றுள்ளது.


கைவேலி பகுதியில் வீட்டில் வசித்த வயோதிப தம்பதியினரின் வீட்டில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டின் கூரையின் மேல் ஏறிய இரு கொள்ளையர்கள் கூரையினை பிரித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து அங்கு இருந்த இரு வயோதிபர்களை தாக்கி விட்டு அவர்களின் பெறுமதியான நகை பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்


இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு கொள்ளையனை பிரதேச வாசிகள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றார்கள்.

Admin Avatar