Tuesday, April 29, 2025
HomeUncategorizedவற்றாப்பளைக்கு சென்ற இளைஞர் குழு விபத்தில் சிக்கி ஒருவர் பலி!

வற்றாப்பளைக்கு சென்ற இளைஞர் குழு விபத்தில் சிக்கி ஒருவர் பலி!

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு போலீஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உளவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தவுடன் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்த சம்பவம் இன்று மாலை  7:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள்  உழவு இயந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாகச் சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்பம் முற்பட்டபோது பெட்டி கழன்று புரண்டு உள்ளது

இந்த விபத்தில் உழவனூர் பகுதியில் சேர்ந்த  16  அகவையுடைய ர.மிதுசிகன் என்ற  இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக் குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைதீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் உடலும் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளார்கள்.

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிதீபன் பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உடலத்தினை சட்டவைத்தி அதிகாரியின் பரிசோதனைக்கு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments