Monday, April 28, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (17) நண்பகல் 12.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மீனவசங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரன மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இவற்றை நீரியல் வளத் திணைக்களத்தினர், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்படைத் தளபதி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்ட இராணுவ அதிகாரி, கடற்படை அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments