Monday, April 28, 2025
HomeUncategorizedமோட்டார்சைக்கிலுக்கு கிழமைக்கு 7லீற்றர் பெற்றோலாக அதிகரிப்பு!

மோட்டார்சைக்கிலுக்கு கிழமைக்கு 7லீற்றர் பெற்றோலாக அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தமிழ் சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்அதற்கமைய, விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 15 லிட்டர் வரை அதிகரிக்கப்படுகிறது.

சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 05 லிட்டரில் இருந்து 8 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 7 லிட்டராகவும், கார்களுக்கான கோட்டா 30 லிட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லிட்டரில் இருந்து 60 லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுவேன்களுக்கான எரிபொருள் கோட்டா 30 லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லொறிகளுக்கான எரிபொருள் 75 லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விசேட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு 20 லிட்டரில் இருந்து 30 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments