Monday, April 28, 2025
HomeUncategorizedதமிழர்பகுதியில் விபத்து ஜேர்மனில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!

தமிழர்பகுதியில் விபத்து ஜேர்மனில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளது
குறித்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார் உந்துருளியில் பயணித்த மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின் போது சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 அகவையுடைய சறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார் இவர் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சல் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments