Monday, May 12, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் கைதான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவரும் சிறையில் அடைப்பு!

புதுக்குடியிருப்பில் கைதான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவரும் சிறையில் அடைப்பு!

15.01.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது ஜஸ்மற்றும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளர் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் கடந்த காலங்களின் மக்கள் மத்தியில் கடமையாற்றி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதற்கு அமைய கைதுசெய்யப்பட்ட இருவரையும் 16.01.2024 முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 30.01.2024 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட போது கந்தக்காட்டில் புனர்வாழ்வு பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அவர்களை வவுனியா சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments