முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிபர்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 16.01.24 இன்று இடம்பெற்றுள்ளது.தேவிபுரம் பகுதியினை சேர்ந்த வயோதி பெண் ஆன மார்கண்டு பாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலத்தினை மீட்டுள்ளார்கள்.
இரவது உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.