புதுக்குடியிருப்பு முத்துமாரி அம்மன் ஆலய பூசகர் மறைவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று தொன்மை மிக்கபுதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பரம்பரை பூசகர் வல்லிபுரம் பிள்ளை காசிவிசுவநாதசுவாமி 03.12.2023 அன்று இறைவடி சேர்ந்துள்ளார்.

புதுக்;குடியிருப்பு பகுதியில் முத்துமாரி அம்மன் ஆலயம் தொன்று தொட்டு மக்களுக்கு அருள்பாலிக்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது இந்த ஆலயத்தில் கிராம மக்களுக்கு பல புதுமைகள் நடந்தேறி இருக்கின்றன இவ்வாறு வழிபட்டு வந்த ஆலயத்தின் பரம்பரை பூசகராக காசிவிசுவநாத சுவாமி அவர்கள் காணப்பட்டுள்ளார்.

முதற்திங்கள் அம்பாளுக்கு விளக்கு வைத்தல் முத்தரிசி தெண்டுகின்ற நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராமங்களில் இடம்பெற்று கிராம தெய்வங்களின் முழக்கங்களுடன் பரிவலம்வழிவிடுவது போன்ற ஆலய பரம்பரை பூசகராக இவர் காணப்பட்டுள்ளமை சிறப்புற அமையும்

இவர் இந்த ஆயத்தின் புதுமைகள் தொடர்பில் இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது தெரிவித்த கருத்தும் ஆலய வழிபாட்டு முறைகளையும் கீள் உள்ள லிங்கினை கிளிக் செய்து பார்வையிடுங்கள்.

Tagged in :

Admin Avatar