புதுக்குடியிருப்பில் கைதான சமூக செயற்பாட்டாளர் பிணையில் விடுதலை!

05.12.2023 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை வீதிபோக்குவரத்து பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

வீதி போக்குவரத்து விதிகளை மீறியகுற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரை 06.12.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் மன்று விடுவித்துள்ளதுடன் வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பொலீஸ் நிலையம் சென்று கையெழுத்து வைக்கவேண்டும் என்றும் பணித்துள்ளது.

Tagged in :

Admin Avatar