சிறுமி துஸ்பிரயோகம்- தந்தைக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு மாவட்டம் ஐயன்கன்குளம் போலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதி ஒன்றில் 9 வயது சிறுமி  துஸ்பிரயோகத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தாயாருடன் வசித்துவந்த குறித்த சிறுமி  தந்தை தன்னை  துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டதை  அடுத்து சிறுமியின் தாயாரினால் கடந்த ; (04-12-2023) போலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள  முறைப்பாட்டிற்கு அமைய (04-12-2023) சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது  செய்யப்பட்டுள்ளார்
 
இதேவேளை குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முலலைத்தீவு மாவட்ட  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது  செய்யப்பட்டுள்ள  தந்தை 05.12.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  ஆயர்படுத்தப்பட்டதுடன்  குறித்த சந்தேக நபரை எதிர்வரும்  19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது
 
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஐயன்கன்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

இதேவேளை நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வரை 5000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Tagged in :

Admin Avatar