Friday, May 9, 2025
HomeUncategorizedவேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!

வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!

கிளிநொச்சியில் இருந்து வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!
கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண்ஒருவர் கடந்த 15.11.2023 அன்று தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரையம் குறித்த பெண் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் திருமணமாக முரசுமோட்டைப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் குழந்தை ஒன்று உள்ளது இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழில்சாலை ஒன்றிற்கு வேலைக்கு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை
கடந்த 15.11.2023 தொடக்கம் இவர் வீடு திரும்பவில்லை என்றும் இவரை கண்டவர்கள் கீள் உள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் கோரியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments