Monday, May 12, 2025
HomeUncategorizedதேராவில்-வீட்டில் பெண்களை 🗡️ கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை!

தேராவில்-வீட்டில் பெண்களை 🗡️ கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை!

தேராவில் கிராமத்தில் துணிகரக் கொள்ளை 10 லட்சத்துக்கும் அதிக சொத்துக்கள் சூறையாடல்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை பயமுறுத்தி பணம் நகை  உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இரவு (04-11-23) நடைபெற்று உள்ளது

வீட்டில் வயோதிபத்தாய் மற்றும் பெண் அவரது மகள் ஆகியோர் இருந்த வேளை முகமூடி அணிந்த இருவர் கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கார்த்தி முனையில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள்.

வீட்டிலிருந்த பணம் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை இதன் போது கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது
சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன 
அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கத்தி முனையில் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன முகமூடி அணிந்த இருவரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார் கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments