Monday, May 12, 2025
HomeUncategorizedகுரவில் கிராமத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூவர் காயம்!

குரவில் கிராமத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூவர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் இன்று 04.11.2023 இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளார்கள்.

மாலை வேளை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதன்போது மின்னல் தாக்குதல் குரவில் கிராமத்தில் பதிவாகியுள்ளது வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன்;போது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் வீட்டில் இருந்து ஒரு பெண் சகோதரி உள்ளிட்ட இரண்டு ஆண் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டில் மின்சார இணைப்புக்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவுமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.

இதன்போது 26 அகவையுடைய செபமாலை டென்சன்,19 அகவையுடைய செ.மதுசாளினி,16 அகவையுடைய செ.அருள்வேந்தன் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments