Friday, May 9, 2025
HomeUncategorizedகேப்பாபிலவில் வீட்டிற்குள் இருந்து இரு இடியன் துவக்குகள் மீட்பு!

கேப்பாபிலவில் வீட்டிற்குள் இருந்து இரு இடியன் துவக்குகள் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை கேப்பாபிலவு பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இரண்டு இடியன் துப்பாக்கிகளை பொலீசார் மீட்டுள்ளார்கள்.

கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் தயாரிப்பு இடம்பெற்று வருவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற பொலீசார் வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியுள்ளார்கள் இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இடியன் துப்பாக்கிகளை மீட்டுள்ளதுடன் அதனை மறைத்துவைத்திருந்த குற்றத்திற்காக 34 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவரையும் கைதுசெய்துள்ளார்கள்.

மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் சந்தேக நபரை முள்ளியவளை பொலீஸ் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளதுடன் சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments