வறிய குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் அரச அதிபரால் தொடக்கிவைப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கான அரசாங்கத்தின் அரிசிவழங்கும் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

26.03.23 இன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்களுக்கு வழங்கி தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வறுமைக்குட் பட்டவர்கள், சமுர்;த்திபெறுவர்கள்,சமூர்த்தி பெற தகுதிஉள்ளவர்களுக்கு பங்குனி,சித்திரை மாதம் குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி படி மாவட்டத்தில் 33ஆயிரத்தி 303 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கா அதிபர் க.விமலநாதன் மாவட்ட பெறியிலளார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் கிராம சேவையாளர் சமூர்த்தி உத்தியோகத்தர் எனப பலர் கலந்துகொண்டு மக்களுக்கான அரிசியினை வழங்கிவைத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *