துணுக்காயில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் வயோதிபர் பலி!


முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இன்று 25.03.23 மாலை ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிiலியல் வீதி ஓராமாக விழுந்து காணப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் முதியவர் வீதி ஓரமாக தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பனங்காமம் பகுதியை சேர்ந்த 49 வயதான செல்வராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தர் என போலீசார் தெரிவித்தனர்

வீதியால் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதி விட்டு தப்பி சென்ற வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மல்லாவி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் உடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *