காட்டு மிருகத்தை வேட்டையாடிய கையுடன் இருவர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் காட்டில் வாழும் உக்குளான் எனப்படும் மிருகத்தினை சட்டவிரோத துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய கையுடன் அவர்களை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று (10) இரவு இந்த சம்பவம் முள்ளியவளை 3 ஆம் வாட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியில் பற்றைக்காட்டில் இருந்து சென்ற குறித்த மிருகத்தினை சட்டவிரோத துப்பாக்கி கொண்டு சுட்டு வேட்டையாடியுள்ளார்கள் இந்த சம்பவத்தின் போது ஹிச்சிராபுரம் மற்றும் முறிப்பு பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வேட்டையாடிய மிருகம் மற்றும் சட்டவிரோததுப்பாக்கி என்பனவற்றுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you