Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: February 2024

கற்சிலைமடுவினை சேர்ந்த இளைஞனே யாழ் விபத்தில் உயிரிழப்பு!

23.02.2024 இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர்; கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுயாழில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் 29 அகவையுடை சிலையடி கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவினை சேர்ந்த அழகராசா நிதர்சன் என்ற இளைஞனே…

மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (22.02.2024) இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன்  பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல்…

அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி!

அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி! 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியால மாணவ மாணவிகளுக்கிடையிலான வீதி ஓட்டப்போட்டி 23.02.024 இன்று நடைபெற்றுள்ளது. பாடசாலை முதல்வர் திரு.முகுந்தன் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு கனடாவில் வசித்து வருகின்ற திருவாளர் சூகந்தசாமிபத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான…

1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை !

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது (22.01.2024) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  இன்றையதினம் இட்பெற்ற வழக்கின்…

கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி!

கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் கரைதுறைப்பற்று  பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி நியமிக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திணைக்களங்களில் இருந்து  தோற்றிய அதிகாரிகளில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்…

புதுக்குடியிருப்பு-வசந்தபுரம் பேராற்றில் மணல் அகழ்வதற்கு தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் பேராற்றினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வினை உடனடியாக ரத்து செய்யகோரி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அவர்களினால் கடந்த 29.01.2024 அன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கும் திணைக்கள பிரதிநிதிகளுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடையம் கடந்த 16.02.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில்…

மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி

மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார்  இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக இன்று 20-02-24 நியமிக்கப்பட்டுள்ளார் இவர் நாளை புதன்…

விடுதலைப்புலிகளின் தங்கம் -தோண்டும் நடவடிக்கை முடிவிற்குகொண்டுவரப்பட்டது!

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டு நாட்கள் தோண்டியும் ஏமாற்றம் ! முல்லைத்தீவு கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குமாரசாமி புரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானான சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும்,அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய…

தேராவில் குளத்து நீரை வெளியேற்றுவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள தேராவில் குளம் கடந்த மூன்று மாங்களாக நீர் நிரம்பி காணப்படுகின்றது இவ்வாறு இந்த குளத்து நீர் மக்களின் காணிகளுக்குள் புகுந்துள்ளதால் இதுவரை 17 குடும்பங்கள் தங்கள் விடுகளில் வாழமுடியாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் குளத்து நீரினை தேக்கங்காட்டு பகுதிஊடாக வெளியேற்றுவதற்கு திட்டவரைபு…

கிளி-இராமநாதபுரத்தில் வாள் வெட்டு!

இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் இது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக மிளகாய் தூள் கொண்டு வீசப்பட்டு சரமாரியாக வாழ்வெட்டு வீசப்பட்டுள்ளது இதன் போது ஐந்து பேர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அதில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்…