Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

உடையார்கட்டு பகுதியில் கஞ்சாபாவித்த இருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார் கட்டு பிரதேசத்தில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

09.03.2024 உடையார் கட்டுப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த ஒருவர் மற்றும் பொதுமகன் ஒருவரும் கஞ்சாவுடன் இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இவர்கள் கஞ்சா மற்றும் ஜஸ் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து 880 மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

உடையார் கட்டு குளத்திற்கு செல்லும் வீதியில் வைத்து இராணுவத்தரப்பினை சேர்ந்த ஒருவரும் பொதுமகன் ஒருவருமே இவ்வாறு கஞ்சா பாவித்து கொண்டிருந்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் நிலைகொண்டிருக்கும் 68 ஆவது படைப்பிரிவின் 1 ஆவது படைஅணியினை சேர்ந்த சிவில் பிரிவு பாதுகாப்பு தரப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *