Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சென்யூட்ஸ் விளையாட்டுக்களகம் நடத்தும் அமரர்ஜேம்ஸ் ஞாபகர்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி 03.03.2024 அன்று முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு.ஜஸ்வர் உமர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக்குழு தலைவர் திரு.நாகராஜன்,முல்லைத்தீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்க அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முல்லை மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் மாதவ ஜெயப்பிராகாஷ் கரைதுறைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியாக நடத்தப்பட்டு இறுதிப்போட்டிக்கு உடுப்பிடிட்டி நவஜீன்ஸ் அணியினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி போட்டியிடவுள்ளது.

இறுதி போட்டிகளை எமது voice of mullai முகநூல் பக்கம் ஊடாகவும் youtub தளம் ஊடாகவும் நீங்கள் பார்வையிடலாம்

https://www.facebook.com/Voiceofmullai

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *