உடையார்கட்டில் இருந்து மரக்கடத்தலில் ஈடுபட்ட ஹயஸ் வாகனம்-யாழ் சாரதி கைது!

மரம் கடத்திய ஹயஸ் வாகனம் மாணவனை மோதித்தள்ளியது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று மாணவன் ஒருவரை மோதி தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் நேற்று (02.07.2024) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தர மாணவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில மாலை நேர வகுப்பு முடித்து வீதியால் மிதிவண்டியில் பயணித்த மாணவன் மீது வேகமாக சென்ற ஹயஸ் வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது

இதன்போது வகானத்தில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் ஏற்றிசெல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள் தேக்க மரக்குற்றிகள் 9 காணப்பட்டுள்ளன இது புதுக்குடியிருப்புபிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திசெல்லப்பட்ட மரக்குற்றிகள் என பொலீசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாகன விபத்தில் படுகாயமடைந்த உடையார் கட்டு தெற்கு பகுதியினை சேர்ந்த 17 அகவையுடை மாணவன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தனை சேர்ந்த ஹயஸ் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு 03.07.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 16.07.2024 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Admin Avatar