காலணி தொழில்சாலையில் 9இலட்சம் பெறுமதியான காலணிகளை திருடியவர் கைது!


தென்னிலங்கையில் உள்ள மாதம்பை பழைய நகரில் உள்ள பெண்களுக்கான காலணி தயாரிக்கும் தொழில்சாலையில் தொடச்சியாக 9 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான 355 சோடி பெண்களுக்கான காலணிகளை திருடியவர் பொலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

இரவு நேரத்தில் தொழில்சாலைக்குள் நுளைந்து ஜன்னலை உடைத்து அங்கிருந்த காலணிகளை திருடி சென்றுள்ளதாக மாதம்பை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் அதே பகுதியினை சேர்ந்த 49 அகவையுடைய நபரை கைதுசெய்துள்ளார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *