Wednesday, April 30, 2025
HomeUncategorizedவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆலயத்தில் பொங்கல் நிகழ்விற்காக வந்திருந்த வேளை இவர் பொலீசாரால் வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டுள்ளமை உறவுகள் மத்தியில் அச்சத்தினையும் விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments