Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

ஜீவநகரில் சாமிக்கு உதவிய பெண் உள்ளிட்ட இருவர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் உறவு கொண்ட சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி சூனியம் நீக்கிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12.05.23 குறித்த வீட்டிற்கு வந்த சாமியார் அங்கு பூசை வைத்து பில்லி சூனியம் நீக்குவதாக செய்துள்ளார்.

ஜீவநகரில் உள்ள வீட்டு காணியில் சிறிய ஆலயம் ஒன்று காணப்பட்டுள்ளது அந்த ஆலயத்தில் இவர் சாமிவேலையினை காட்டதொடங்கினார்.

அன்று யாழ்ப்பாணத்தில் இருந்தும் வவுனியாவில் இருந்து வந்த இரண்டு யுவதிகளுக்கு ஜீவநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவளைக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்கிவந்துள்ளார்கள்.

யுவதிகளை வீட்டிற்குள் தனி அறையில் தனிமையில் அழைத்து சாமி பில்லிசூனியம் கலைப்பதாக அழைத்து சென்று காமல லீலையினை காட்டியுள்ளார்

பூசாரியின் இந்த நடவடிக்கைக்கு சாராயப்போத்தல் வாங்கிக்கொடுக்கபட்டுள்ளது
பூசாரியின் இந்த சூனியம் நீக்கும் செயற்பாட்டில் வவுனியாவினை சேர்ந்த யுவதி ஒருவர் செய்து முடித்து வீடு சென்றுள்ளார்

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த யுவதி ஒருவரின் அக்காவிற்கு சூனியம் கலைப்பதாக சென்ற போது அக்கா மாதவிடாய் காரணமாக அவருடன் வந்த தங்கையினை அழைத்து அவரிடம் செய்வினை இருப்பதாக சொல்லி வீட்டிற்குள் தனிமைஅறைக்குள் அழைத்து சென்று செய்வினை கலைக்க முற்பட்டுள்ளார்.

இதற்காக குறித்த யுவதிக்கு சாராயம்,கசிப்பு,கள்ளு என்பன பருவைத்து தனது காம லீலையினை காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் வெளியில் வந்து நடந்தவற்றை சகோதரர்களிடம் கூறியபோது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தலையில் இருந்து மந்திரும்ஓதி தனது வாயால் வயிற்றில் இருக்கும் செய்வினையினை பெண் உறுப்பு வளியாக பூசாரி எடுப்பதாக தெரியவந்துள்ளது.
குறி;த் பூசாரியினை கைதுசெய்த பொலீசார் பூசரியிடம் இருந்து ஆணுறைகளை மீட்டுள்ளார்கள்.

பூசாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டுக்கார பெண் மற்றும் வீட்டுக்கார ஆண் உள்ளிட்ட இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் மேலும் மூவரை தேடிவருகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் மாவட்டமருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *