முல்லைத்தீவில் போலி தங்க முத்துக்களை விற்பனை செய்யமுயன்றவர் கைது!


முல்லைத்தீவில் போலியா தங்கமுலாம் பூசப்பட்ட முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் 19.03.23 இன்று இடம்பெற்றுள்ளது ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி தங்கமுலாம் பூசப்பட்ட 1400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவு நகரப்பகுதிக்கு வந்துள்ளார் இந்த நிலையில் குறித்த சந்தேக நபரைகைதுசெய்த முல்லைத்தீவு பொலீசார் போலி முத்துக்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் 20.03.23 நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *