Sunday, April 27, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவிற்கு அனர்த்த முகாமைத்துவம் விடுக்கும் முன் எச்சரிக்கை!

முல்லைத்தீவிற்கு அனர்த்த முகாமைத்துவம் விடுக்கும் முன் எச்சரிக்கை!

எதிர்வரும் வாரத்தில் வடக்கு நோக்கி சூறாவளி போன்ற ஒரு வானிலை எதிர்வு கூறப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இந்த வானிலை எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை அறிவிப்பு 26 மற்றும் 27 தேதிகளில் சூறாவளி போன்ற வானிலை நிலவக்கூடும்

26 மற்றும் 27 தேதிகளில் காற்றழுத்தக் குறைவு காரணமாக சூறாவளி நிலையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்பார்க்கப்படும் வானிலை:கனமழை சில இடங்களில் 120 மில்லிமீட்டருக்கு மேல் மழை பொழியக்கூடும்.

வலுவான காற்று: காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீட்டர் மணிக்கு உயரக்கூடும், இது சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.வெப்பநிலை குறைவு: வெப்பநிலை 21.5°C வரை குறையக்கூடும், இதனால் திடீர் குளிர்ச்சியான வானிலை நிலவலாம்.

குடிமக்கள் கவனமாக இருக்கவும்:வானிலை தகவல்களை தொடர்ந்து கவனிக்கவும்.கனமழை மற்றும் கடுமையான காற்றின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்.வெளிப்புற செயல்பாடுகளை திட்டமிடவும்.பாதுகாப்பாக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments