உடையார்கட்டில் வீசிய புயல்காற்று வீடுகள்பல சேதம் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு,குரவில்,மூங்கிலாறு பிரதேசங்களில் நேற்று 21.04.23 மாலை வேளை வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன் நீண்ட நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடும் காற்று காரணமாக குரவில் பகுதிக்கு செல்லும் வீதியில் மரங்கள் முறிந்து வீழ்நதுள்ளதால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

உடையார் கட்டு தெற்கு கிராமஅவுலகர் பிரிவில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன உடையார் கட்டு வடக்கில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மூங்கிலாறு  கிராமத்தில் பொநோக்கு மண்டபம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

மக்களின் வாழ் இடங்களில் நின்ற பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
சேதவிபர மதிப்பீடுகளை கிராம சேவையாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *