எமில் காந்தன் தலைமையிலான அணியினர் முல்லைத்தீவில் பரப்புரை!

எமில்காந்தன் தலைமையிலான கோடாரி சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அணியினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 25.10.2024 இன்று பயணம் மேற்கொண்டு கட்சி பரப்புரை அலுவலகம் ஒன்றினை திறந்துவைத்து மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பில் மக்கள் சந்திப்பினை நடத்தி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் சிலாவத்தை பகுதியில் உள்ள மரக்கறி வியாபார நிலையம் ஒன்றுக்கு சென்று அங்கும் சந்திப்புக்களை நடத்தியுள்ளதை தொடர்ந்து சிலாவத்தை சந்திப்பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்கள் சந்திப்புக்களை நடத்திவருகின்றார்கள்.

வாக்களா பெருந்தகைகளே…
கோடாரி சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவிற்கு உங்கள் வாக்குகளை வழங்கி இலக்கம் 1ற்கு உங்கள் விருப்பு வாக்குகளை இட்டு மக்களின் ஏகோபித்த தெரிவாக பாராளுமன்றம் அனுப்புங்கள்.. (paid Ad)

Admin Avatar