போஸ்டல் ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரம் பகுதியில் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்கான போஸ்டல் ஒட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று 24.10.24 இரவு பதிவாகியுள்ளது.

இரவு 11.00 மணியளவில் முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக போஸ்டல் ஒட்ட முற்பட்டவர் காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தகரம் அடித்த வேலிக்கு முன்னால் காணி உரிமையாளர் யானையில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மின்சார இணைப்பு போடப்பட்டிருந்தது மின்சாரத்தில் சிக்குண்ட நபர் உயிரிழந்துள்ளார்

முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானை சேர்ந்த 45 அகவையுடைய காசிலிங்கம் லங்காதீபன் என்பவே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த காணியின் உரிமையாளர் அனுமதிபெற்று யானைவேலி அமைத்தாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Admin Avatar