புதுக்குடியிருப்பில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் இளைஞனை தேடி பொலீஸ் வலைவிரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 15 அகவையுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  புதுக்குடியிருப்பினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கைவேலி பகுதியினை சேர்ந்த இளைஞன் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்க அமைய 20.10.24 இன்று குறித்த சிறுமி அழைத்துவரப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட கைவேலி இளைஞனை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Admin Avatar