மல்லாவியில்  துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சார நடவடிக்கை!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர் மல்லாவியில்  துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர் 

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்குச் சின்னத்தில் இலக்கம் 6 இல்  வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, இன்றைய தினம் மல்லாவி பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்காளினை  விநியோகித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார் 

இதன்போது எதிர்வரும் தேர்தலி்ல் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும். என்பது பற்றி தெரிவித்திருந்தார் 

இதன்போது  போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன் கலைஞர் மாணிக்கம் ஜெகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்

Admin Avatar