ஒட்டுசுட்டான் வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த வாகனம்!

ஒட்டுசுட்டான் வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த வாகனம்!

19.10.2024 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒட்டுசுட்டான் முள்ளியவளை வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த சிறியரக பாரா ஊர்த்தி ஒன்று வீதியினை விட்டு விலகி விபத்தினை சந்தித்துள்ளது.

முள்ளியவளையில் உள்ள வணிக நிலையம் ஒன்றிற்கு வவுனியாவில் இருந்துபொருட்களை ஏற்றி இறக்கும் சிறியரக பார ஊர்த்தியே இந்த விபத்தினை சந்தித்துள்ளது.

வீதியினை விட்டு விலகி அருகில் உள்ள சிறிய மரம் ஒன்றுடன் மேதியதில் வாகனம் சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் அதில் இருந்தவர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Admin Avatar