மன்னாகண்டல் வீதியில் நகை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாhகண்டல் வீதியில் இரவு நேரங்களில் பயணித்த குடும்ப பெண் ஒருவரிடம் இருந்த தங்க செயினை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் 19.10.2024 அன்று முறைப்பா பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இருந்து நேற்று 18.10.2024 அன்று தனது கணவர் குழந்தையுடன் மோட்டார் சைக்கிலில் குடும்பமாக பயணித்துக்கொண்டிருந்த வேளை மன்னாகண்டல் பகுதியில் கறுப்பு பல்சர் மோட்டார் சைக்கிலில் வந்த நபர் ஒருவர் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார் முத்தையன் கட்டு முத்துவிநாயகபுரத்தில் வசித்துவரும் குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக 19.10.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்வம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Admin Avatar