Friday, May 9, 2025
HomeUncategorizedவிசுவமடு கண்ணகி நகர் கிராமத்தில் இடம்பெற்ற விபத்து குடும்பஸ்தர் பலி!

விசுவமடு கண்ணகி நகர் கிராமத்தில் இடம்பெற்ற விபத்து குடும்பஸ்தர் பலி!

விசுவமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

விசுவமடு கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த குடும்பஸ்தர் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கண்ணகி நகர் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்ணகி நகர் பகுதியினை சேர்ந்த 43 அகவையுடை குமாரசாமி புரம் பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசேந்திரம் கௌதமன் என்பவர் விபத்தில் காயமடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி தர்மபுரம் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments