Monday, April 28, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவு மாவட்டத்தில் டீசலுக்கு தட்டுப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் டீசலுக்கு தட்டுப்பாடு!

டீசலுக்கு தட்டுப்பாடு !
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளார்

இன்று மாத இறுதியில் நாளை சிலவேளை எரிபொருளுக்கான விலை மாற்றங்கள் ஏற்படும் என்பதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இல்லாத நிலை காணப்படுகின்றது

இதனால் விவசாயிகள் உள்ளிட்ட போக்குவரத்தில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்

ஒரு லிட்டர் டீசல் 307 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலை இன்று 30.09.2024முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இல்லாத நிலை காணப்படுகின்றது

இதனால் தற்போது விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நிலத்தை பண்படுத்துவதற்கு உளவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது அதேவேளை போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளும் டீசல் இல்லாத காரணத்தினால் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு பெறுவதாக தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments