தேர்தல் காலத்தில் அமைதியின்மை ஏற்பட்டால் துப்பாக்கிசூடு!

இலங்கையின் ஐனாதிபதி தேர்தல் இறுதிக்கட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் பாதுகாப்பு படைப்பிரிவினருக்கான முக்கிய கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகமுக்கியமான கட்டளையினை பொலீசார் இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் எந்த ஒரு இடத்தில் என்றாலும் அமைதியின்மை ஏற்படும் சந்தர்பத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படலாம் துப்பாக்கிசூடு நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் தேசிய பாதுகாப்பு சம்மந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது வாக்கு பெட்டிகளை கொண்டுசெல்லும் சந்தர்ப்பங்களில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது

Admin Avatar