Tuesday, April 29, 2025
HomeUncategorizedயார் ஐனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வினை தரப்போவதில்லை!

யார் ஐனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வினை தரப்போவதில்லை!

யார் ஐனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வினை தரப்போவதில்லை-ம.ஈஸ்வரி!

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையி;ன 9 ஆவது ஜனாதிபதி தேர்தலின் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்

எங்கள் நாட்டில் யார் ஐனாதிபதியாக வந்தாலும் எங்களுக்கு தீர்வு தரப்போவதில்லை என்பதால் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவில்லை புதிதாக ஐனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி தரப்போவதில்லை குற்றம் புரிந்தவர்களை காப்பாற்றக்கூடியவர்கள்தான் மீண்டும் வருவார்கள்.

அவ்வாறு ஐனாதிபதியாக வருவர்கள் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தினால் நாங்கள் அவர்களை வரவேற்போம்
குற்றம் புரிந்தவர்களுக்கு துணையாய் நிற்பவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்

யார் ஐனாதிபதியாக வந்தாலும் ஆட்சேபனை இல்லை எங்களுக்கான தீர்வு கிடைக்காது என்பதுதான் உண்மை சர்தேவ குற்றவியல் கூட்டில் குற்றவாளிகளை நிறுத்தும் வரை எங்களுக்கான தீர்வினை யாரும் தரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments