அன்னை பூபதியின் ஊர்தி பயணம் கிழக்கு நோக்கி பயணம்!


அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப்பவனி 17.04.23 இன்று முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளது.

முல்லைத்தீவிற்கு வந்த அன்னைபூபதியின் ஊர்தி பவனி இறுதி போரில்உயிரிழந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்று அங்கு போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரை சென்றடைந்து கொக்குளாய் வீதிஊடாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தினை சென்றடையவுள்ளது.

இந்த ஊர்தி பயணத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயணத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *