திம்பிலி பாடசாலையின் சமையல் அறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான் !

திம்பிலி பாடசாலையின் சமையல் அறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான் 

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு  தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களால் புதுக்குடியிருப்பு  திம்பிலி பாடசாலை சமையல் அறை அமைப்பதற்காக (29)  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 115 மில்லியன் ரூபா நிதியில்  22.5 மில்லியன் ரூபா புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது. 

அந்த வகையில் குறித்த நிதியில்  இருந்து புதுகுடியிருப்பு திம்பிலி பாடசாலை சமையல் அறை அமைப்பதற்கு நேற்று  அடிக்கல் நாட்டி வைக்கப்பெற்றது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன் அவர்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Tagged in :

Admin Avatar