Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுள்ளியவளை பகுதியில் துப்பாகி ரவைகளுடன் ஒருவர் கைது!

முள்ளியவளை பகுதியில் துப்பாகி ரவைகளுடன் ஒருவர் கைது!

முள்ளியவளை பகுதியில் துப்பாகி ரவைகளுடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

23.05.2024 இன்று முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினை சோதனை செய்த முள்ளியவளை பொலீசார் வாகனத்தின் சாவி பெட்டியில் இருந்;து ஒருகைக்குண்டு,ரி-56 ரக தோட்டாக்கள்20, எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் 6 என்பனவற்றை மீட்டுள்ளார்கள்.

மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் உள்ள தண்ணீரூற்று,முல்லைத்தீவு வீதியில் குறித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பொலீசாரால் வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

தென் பகுதியினை சேர்ந்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments