முல்லைத்தீவில் இராணுவத்தின் தேவைக்காக காணிசுவீகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின்தேவைக்கா கணீசுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் எதிர்வரும் 02.05.2024 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள அளம்பில் தெற்கு கிராமத்தில் உள்ள இலங்கை இராணுவத்தின் 24 ஆவது சிங்க றெஜிமன்ட் அமைந்திருக்கும் 2.0234 ஹெக்டயர் அளவு கொண்ட காணி 24 ஆவது சிங்கறெஜிமன் படைத்தலைமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு செய்வதற்காக எதிவரும் 02.05.2024 அன்று நில அளவைத்திணைக்களத்தினர் வருகை தந்து அளவீடு செய்யஉள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.இந்த அறிவித்தல் அளம்பில் தெற்கு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

Admin Avatar