Tuesday, April 29, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு முச்சக்கரவண்டி!

புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு முச்சக்கரவண்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு முச்சக்கர வண்டியினை வாழ்வாதாரமாக வழங்கிவைத்துள்ளார்கள்.

தாய்த்தமிழ்பேரவையின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் செரீனா. தவேந்திரம் அவர்களின் நிதி அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவர் மாற்றுத்திறனாளியான நிலையில் அவரது மனைவி ஒரு காலை இழந்த நிலையிலும் உள்ள குடும்பம் ஒன்றிற்காக ரூபா 1080000 ( பத்துலட்சத்து எண்பதாயிரம் ) பெறுமதியில் முச்சக்கரவண்டி ஒன்று வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது
இதற்கான நிதியினை சுவீஸ் நாட்டில் வசிக்கும் செரீனா.தவேந்திரம் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார்கள்.

குறித்த குடும்பத்தின் வீட்டில் வைத்து வழங்கும் நிகழ்வில் தாய்த்தமிழ்பேரவையின் ஸ்தாபகர் ச.ரூபன்,, ஒருங்கிணைப்பாளர் த.நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டு உதவியினை வழங்கி வைத்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments