மிக பிரமாண்ட தயாரிப்பில் பண்டாரவன்னியன் நாடகம்!

முல்லைத்தீவு முள்ளியவளை மாவட்டத்தில் நாட்டுக்கூத்து உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கும் கிராமங்களில் ஒன்றாக காணப்படும் முள்ளியவளை பிரதேசத்தில் பல விருதுகளை வென்ற கலைஞர்களின் தரமான நடிப்பில் உருவான வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்று நாடகம் எதிர்வரும் 20.04.2024 அன்று இரவு 8.00 மணிக்கு அரங்கேறவுள்ளது.

முதுபெரும் கலைஞர் என்.எஸ். மணியம் அவர்களின் நெறியாள்கையில் உருவான பண்டாரவன்னியன் நாடகத்திற்கான முழுமையான நிதி அனுசரணையினை பிரான்சில் வசிக்கும் ஆனந்தராசா கீத்தா குடும்பத்தினர் வழங்கி நிக்கின்றார்கள்.
பண்டாரவன்னியனின் வாழ்கை வரலாற்றில் வீரம்,காதல்,துரோகம் அனைத்தினையும் கண்முன்னே சித்தரிக்கும் கலைஞர்களின் திறமையான நடிப்பில் இந்த நாடகம் அரங்கேறவுள்ளது.

இதன் முன்னோட்டத்தினை கீழ் உள்ள லிங்கில் நீங்கள் பார்க்கலாம்.

Admin Avatar